எரிபொருள் கொள்வனவு செய்வோருக்கு அவசர அறிவுறுத்தல்- செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் எரிபொருள் கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு பொலிஸார் அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.
இந்த அறிவுறுத்தலை பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வழங்கியுள்ளார்.
அதன்படி வீடுகள் மற்றும் தனிப்பட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எரிபொருளுடன் தொடர்புடைய தீப்பரவல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக இவ்வாறு வீடுகள் உள்ளிட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதனை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,