சர்வகட்சியினூடாக தெற்கு மக்கள் எதிர்பார்க்கும் விடயம்: கோவிந்தன் கருணாகரம்(Video)

Batticaloa Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis
By Kumar Jul 28, 2022 06:37 AM GMT
Report

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள மூன்று கட்சிகளையும் உடைத்து சிதறடிக்கும் வேலைத்திட்டங்களை சிலர் வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் முன்னெடுத்துவருவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நேற்று(27)  நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நினைவுதினம் அனுஷ்டிப்பு

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் பல கட்டங்களாக நடைபெற்றாலும் 1983ஆம் ஆண்டு ஜுலையில் நடாத்தப்பட்ட இனக்கலவரம் தமிழின சுத்திகரிப்பாகவே பார்க்கப்பட்டது.


கறுப்பு ஜுலையென்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்ட அந்த நாட்கள் ஜுலை 23ஆம் திகதி அனுஸ்டிப்பது பிழையான விடயமாகும்.

1983ஆம் ஆண்டு ஜுலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் விடுதலைப்புலிகளினால் 13 இராணுவத்தினர்தான் கொல்லப்பட்டார்கள்.

இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பினை சென்றடைந்த நிலையிலேயே ஏற்கனவே திட்டமிட்டிருந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜுலை 25ஆம் திகதியும் 27ஆம் திகதியும் தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைக்குள்ளே இலங்கை இராணுவத்தின் அனுசரணையுடன் சிலர் சிறைச்சாலைக்குள் அனுப்பப்பட்டு 25ஆம் திகதி 36அரசியல் கைதிகளும் 27ஆம் திகதி 17 அரசியல் கைதிகள் உட்பட 53பேர் வெலிக்கடைக்குள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

மே மாதமும், ஜுலை மாதமும் தமிழர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாகயிருந்தது. இந்த இரு மாதங்களும் தமிழர்களை கொடுமைப்படுத்திய சிங்கள அரசதலைவர்களுக்கு தற்போது மறமுடியாத நாளாக அமைந்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் அரசாங்கங்களுக்கு தற்போது என்ன நடைபெற்றுவருகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நாட்டு மக்களினால் விரட்டியடிக்கப்பட்டு எந்த நாட்டிலும் தங்கமுடியாத சூழ்நிலையேற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச இந்த நாட்டில் பத்து வருடத்திற்கு மேலாக இந்த நாட்டில் ஜனாதிபதியாகயிருந்து இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார்.

மே மாதம் முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் கொன்றுகுவித்த கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு எதிராக ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தொடங்கியது.

மே மாதம் 09ஆம் திகதி பிரதமர் பதிவியிலிருந்து மகிந்தராஜபக்ச விலகவேண்டிய சூழ்நிலையேற்பட்டது. ஜுலை மாதத்தில் இந்த நாட்டில் ஸ்திரமற்ற தன்மையேற்பட்டது.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரமதர் வாசஸ்தலம் என்பன போராட்டக்காரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாடு அல்லோல கல்லோலப்பட்டு நிற்கின்றது.

தமிழர்கள் தமது நியாயமான உரிமைகளுக்காகவே அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் கடந்த காலத்தில் போராடியுள்ளார்கள் என்பதை இன்றைய அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமையுடன் வந்த ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாகியுள்ளார்.

இன்று சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்காக அறை கூவல் விடுத்துள்ளார். 2015- தொடக்கம் 2019 வரையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்தது.

இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தாக கதைகள் கூறப்படுகின்றன.

சர்வகட்சியினூடாக தெற்கு மக்கள் எதிர்பார்க்கும் விடயம்: கோவிந்தன் கருணாகரம்(Video) | People South Waiting Through Party Karunakaram

ஆனால் தற்போது வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு யாராலும் சிதைக்கப்படமுடியாமலும். உடைக்கமுடியாமலுமே நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி தெரிவு தொடர்பில் ஒன்றுபட்ட நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர்கள் பத்துபேரும் செயற்பட்டுள்ளனர்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியானது சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் ஒரு பாதிப்பனை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளது.தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையொன்று ஏற்படவேண்டும் என்பது அனைவரது அபிலாஷையாகும்.

அந்தவகையில் சர்வகட்சி ஆட்சியமைப்பதற்கான அழைப்பினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் பங்கெடுக்கும் என்று நான் கருதவில்லை. சர்வகட்சி ஆட்சியொன்று அமையவேண்டும், எமது இன பிரச்சினைக்கான தீர்வு ஒன்று இந்த சர்வகட்சி ஊடாக ஏற்படவேண்டும்.

1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தம் உருவாகும்போது புத்தி பிக்குகளுடன் இணைந்து ஜே.ஆர்.ஜயவர்த்தன புத்த பிக்குகளுடன் இணைந்து கண்டியாத்திரை சென்று எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தனது அரசியல் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு பண்டாரநாயக்க அந்த ஒப்பந்தத்தினை அமுல்படுத்த தவறியிருந்தார்.

2000 ஆம் ஆண்டு சந்திரிகாவினால் தீர்வுத்திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டபோது ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்திற்குள் அது எரிக்கப்பட்டது. இதுபோன்று பல ஒப்பந்தங்கள் எறிக்கப்பட்டது.

தமிழர்களின் எதிர்பார்ப்பு

சர்வகட்சியினூடாக தெற்கு மக்கள் எதிர்பார்க்கும் விடயம்: கோவிந்தன் கருணாகரம்(Video) | People South Waiting Through Party Karunakaram

இன பிரச்சினைக்கான தீர்வொன்று கிடைக்கவேண்டுமாகயிருந்தால் எந்தவிதமான எதிர்ப்புகளும் தெற்கு அரசியல் கட்சிகளிடையே இருக்ககூடாது.

இந்த ஆட்சி நிலைத்திருக்குமானால் எதிர்வரும் காலத்தில் சர்வகட்சி ஆட்சியொன்று உருவாகுமாகயிருந்தால் சர்வகட்சிகள் இணைந்து பொருளாதார மீட்புக்கு மேலாக இன பிரச்சினைக்கான தீர்வினை தருவார்களென்று எதிர்பார்க்கின்றோம்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 22வது திருத்த சட்டத்தில் இன பிரச்சினையும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். தமிழ் மக்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோகநாதன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீதான சர்வதேச நெருக்கடிக்கு இதுவே காரணம்! விரைவாக முடிவெடுங்கள் - சார்ல்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை (VIDEO)


நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US