வெலிக்கடை சிறைபடுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்(Photo)
மன்னார் - வெலிக்கடை சிறைபடுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO)அலுவலகத்தில் இன்று (27) காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நினைவு நாள் அனுஷ்டிப்பு

இந்த நினைவேந்தல் நிகழ்வில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி ஆகியோர் உட்பட முன்னணி போராளிகளான ஜெகன், தேவன் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ
நோகராதலிங்கம் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam