இலங்கையர்களின் நெகிழ்ச்சியான செயல் - யானையின் உயிரை காப்பாற்ற போராடும் மக்கள்
தம்புள்ளையில் உயிருக்கு போராடும் யானை ஒன்றை அந்தப் பகுதி மக்கள் பராமரித்து வருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கண்டலமே அழகி என்று அழைக்கப்படும் காட்டு யானை, அதன் முன் காலில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதால் மிகுந்த வேதனையில் இருப்பதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் பல மாதங்களாக சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் இதுவரை குணமடையவில்லை.
வனவிலங்கு அதிகாரிகள்
இந்நிலையில் காயம் அடைந்துள்ள காட்டு யானைக்கு உணவளிக்க வேண்டாம் என்று வனவிலங்கு அதிகாரிகள், அந்தப் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். எனினும் துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக யானையால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கண்டலம் குளத்திற்கு அருகிலேயே யானை உள்ளதால் அதற்கான உணவினை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, காட்டு யானை இருக்கும் இடத்தில் பல பிரதேசவாசிகள் முடிந்தவரை குறைந்த உணவை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள்
இதற்கிடையில், காட்டு யானையின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் அந்தப் பகுதிக்கு சென்ற சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் யானையின் நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.

காட்டு யானையின் உயிரைக் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகள் பல்வேறு சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
இலங்கையில் யானைகளின் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளதுடன், அது அதிகளவான சுற்றுலா பயணிகளை கவர்ந்தவையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam