ராஜபக்சர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயத்தை வலியுறுத்தும் கே.டி.லால்காந்த (Video)
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பதை ராஜபக்சர்கள் உள்ளிட்ட
ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் அரசியல் குழு
உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த
தெரிவித்துள்ளார்.
கொத்மலை - பூண்டுலோயா பகுதியில் நேற்று (27.11.2022) நடைபெற்ற கொத்மலை தேர்தல் தொகுதியின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டை விட்டோடிய பசில் ராஜபக்ச அண்மையில் நாடு திரும்பினார். பலமான அரசியல் இயக்கத்தை அவர் உருவாக்க போவதாக சிலர் கூறித்திரிகின்றனர். விமான நிலையம் வந்த பசிலுக்கு அவரின் சகாக்கள் மற்றும் அடியாட்களால் அரச அனுசரணையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள்

ஆனால் தான் நாட்டைவிட்டு செல்ல முற்படுகையில் விமான நிலைய ஊழியர்கள் தன்னை எப்படி கவனித்தார்கள் என்பதை பசில் ராஜபக்ச மறந்துவிடக்கூடாது.
மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. கோரிக்கைகள் அவ்வாறே உள்ளன.
கொள்ளையர்கள், பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர்.

இதையும் பசில் உள்ளிட்டவர்கள்
புரிந்துகொள்ள வேண்டும்.
அதேவேளை, ஹிட்லர் பற்றி கதைப்பதற்கு முன்னர் 'காற்சட்டை'யை எப்படி சரியாக
அணிவது என்பதை ரணில் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri