சீன தூதரகத்தின் அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் வங்கி பதிலடி
நீதிமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் சீன நிறுவனத்தின் கொடுப்பனவுகள் தொடர்பில் உாிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
சீனாவின் சேதனப்பசளைகள் நிறுவனத்தின் கடன் கடிதக் கொடுப்பனவுகள் மற்றும் ஒப்பந்தங்களை உாிய முறையில் செயற்படுத்தாமை காரணமாக இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக முன்னதாக சீன தூதரகம் அறிவித்திருந்தது.
இதனையடுத்தே மக்கள் வங்கியின் இந்த பதில் வெளியாகியுள்ளது.
கொடுப்பனவுகளை இடைநிறுத்துவது தொடர்பில் நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தமை காரணமாகவே தாம் அதனை நிறுத்தியதாக மக்கள் வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மக்கள் வங்கியின் இந்த செயற்பாடு காரணமாக சீனாவின் சேதனப் பசளை நிறுவனத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியிருந்தது.
அத்துடன் இலங்கையுடன் சர்வதேச வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்கள், இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்படும் கடன் கடிதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கையின் அரச வங்கி! சீன தூதரகம் அதிரடி
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri