கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக தொடர்ந்தும் நீண்ட வரிசைகளில் மக்கள்
நாட்டில் தொடர்ந்தும் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
அதன்படி கொழும்பின் பல பகுதிகளிலும் இன்றும் டீசல் மற்றும் பெற்றோல் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மக்கள் கூறுகையில், தற்போது ரணில் பிரதமராக வந்துள்ளார். சிறப்பாக செயற்படுவாராயின் நல்லது.
இனிமேலும் பெற்றோல், டீசல் என்பற்றுக்காக நாம் வரிசையில் நிற்கா வண்ணம் எமக்கு அனைத்தையும் பெற்றுத் தருவாராக இருந்தால் நல்லது என குறிப்பிட்டுள்ளனர்.