மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த குடும்பலுக்கு எதிராக மக்கள் போராட்டம்!
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி, அவர்களின் நகைகளை கொள்ளையிட்டு பின்னர் கிணற்றில் வீசி எறிந்த கும்பலுக்கு சார்பாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டாம் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று (27.03.2026) நடைபெற்றது.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
போராட்டக்காரர்கள் மட்டு காந்தி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக பழைய கச்சேரி நோக்கி சென்றனர் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்தி நித்தியிடம் மனு ஒன்றையும் கையளித்தனர்.

கடந்த 20ஆம் திகதி, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பழைய கிணற்றில் வீசப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட வெல்லாவெளி 40ஆம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நளாயினி ரவி என்ற பெண்ணுக்கு நீதி கோரி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன்படி, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 8.30 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா. சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு, கொலை செய்யப்பட்ட தாய்க்கு நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனு கையளிப்பு
போராட்டக்காரர்கள் எழுப்பிய கோஷங்களில், "கைது செய்யப்பட்ட கொலை கும்பலுக்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகக் கூடாது", "பெண்களின் சுதந்திரம் கையிலுள்ளவர்களுக்கு, நீதி எங்கே?", "மனிதநேயமற்ற கொலைகார கும்பலை தூக்கில் இடு", "நளாயினியின் கொலைக்கு நீதி கொடு", "கிணற்றில் வீசியவர்களுக்கு என்ன தண்டனை?", "நளாயினி நகை அணிந்தது குற்றமா?", "எங்கள் கிராமத்தின் தாயின் சடலத்தை திருப்பி கொடு", "குற்றவாளிகளுக்கு உடன் தண்டனை கொடு", "கொலையாளிகளுக்கு துணை போகாதீர்கள்", "நீதி சாகக்கூடாது" என்ற சுலோகங்கள் இடம்பெற்றன.

போராட்டக்காரர்கள் அங்கிருந்து பஜார் வீதி வழியாக நீதிமன்ற வீதி சுற்றுவட்டத்தை கடந்து பழைய கச்சேரி சென்றனர்.
இதன் போது, மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்குப் பிறகு, பொலிஸார் போராட்டக்காரர்கள் உள்ளே செல்லாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் நீதி கோரி அமைச்சர் சுனில் ஹந்தி நித்தியிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan