நெடுந்தீவு மக்கள் வீதிக்கிறங்க காரணம்! கவலை வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா

Jaffna Douglas Devananda Sri Lankan protests Government Of Sri Lanka
By Kajinthan Apr 26, 2026 08:14 AM GMT
Report

நெடுந்தீவில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் குறித்து தாம் கவலையடைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமது அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வுக்கோரி நெடுந்தீவில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்

பிரச்சினைகளுக்கான தீர்வு

தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாத நிலையில் அல்லது அவ்வாறான ஏதுநிலை உருவாக்கலில் ஏற்பட்ட இயலாமையால் தான் நெடுந்தீவு மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இது அவர்களில் இறுதி அஸ்திரமாகவே இருக்கும்.

இவ்வாறான நிலை அந்த மக்களுக்கு வந்தமை இட்டு தான் கவலையடைகின்றேன். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் நெடுந்தீவு மக்கள் தமக்கான தேவைகளை பெற்றுக்கொள்ள குறிப்பாக தொடர்பு கொண்டு தமக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாதபடியினால் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று நடத்தியிருந்தார்கள்.

இது அவர்களின் ஜனநாயக உரிமையும் கூட. 90 களின் ஆரம்பத்தில் தீவகப்பகுதிகுள் அரச படையினரால் விடுவிக்கப்பட்ட பின்னர் அன்றைய அரசு சக தமிழ் கட்சிகளுக்கு மக்கள் பணிகளில் ஈடுபட வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் அன்று எந்த கட்சிகளும் அதற்கு முன்வரவில்லை. அதன் பின்னரே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று நாம் அங்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு வாழ்ந்த மக்கள் எதிர்கொண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு எமக்கு இருந்தது.

அவற்றை அனைத்து வழிகளிலும் செய்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பான அமைதியான வாழ்வியலை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றோம். குறிப்பாக நெடுந்தீவை சேர்ந்த மக்கள் தமது மூத்த பிரதிநிதிகள் ஊடாக எம்மை சந்தித்திருந்தார்கள்.

வாழ்க்கையை பாதுகாத்து தருமாறும் அழைப்பு 

இதன்போது தாம் பட்டினியில் எல்லையில் இருக்கின்றோம் என்றும், தமது வாழ்க்கையை பாதுகாத்து தருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்கள். அவர்களின் அழைப்பின் பேரில் தான் நாம் நெடுந்தீவு சென்றிருந்தோம்.

இதேநேரம் நாம் செல்லும்போது பாதுகாப்பு தரப்பினர் எம்முடன் வந்திருக்கவில்லை. நாம் தனியாகச் சென்றுதான் அந்த மக்களின் துயரங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருந்தோம்.

நெடுந்தீவு மக்கள் வீதிக்கிறங்க காரணம்! கவலை வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா | People Neduntheevu Are Taking Streets Douglas

இதே நேரம் படைத்தரப்ப, ஏனைய தரப்பினரோ அங்கு சென்றிருந்தால் தமக்கு எதிரான தரப்பினரை பழிவாங்கியிருந்திருக்கலாம். இதனூடாக உயிர் இழப்புகளும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எனது தலைமையில் எமது கட்சி உறுப்பினர்கள் அங்கு சென்றிருந்தமையால் எந்த ஒரு உயிரிழப்போ பழிவாங்கல்களோ ஏற்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக நெடுந்தீவு மக்கள் தமது எந்த பிரச்சினையானாலும் சரி குறிப்பாக காச்சல் வந்தால் கூட அதற்கான தீர்வை பெற எமக்கே தொடர்புகளை மேற்கொள்வார்கள்.

ஆட்சி மாற்றம் 

ஆனால் சமீப காலமாக குறிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அந்த மக்களுக்கு யாருடனும் தொடர்புகொண்டு தமக்கான தீர்வுகளை பெற அல்லது சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள இயலாமையால் பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாதபடியினால் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று நடத்தியிருந்தார்கள்.

சமீபத்தில் கூட எமது கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கின் ஆளுநரை சந்தித்து நெடுந்தீவு மக்கள் மட்டுமல்லாது கால்நடைகள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சுட்டிக்காட்டி தீர்வை வழங்குமாறு கோரியிருந்தனர். அதற்கு ஆளுநரும் சாதகமான பதிலை வழங்கியிருந்தார்.

அந்த வகையில் தற்போதைய போக்கின்படி பார்த்தல் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இதேநேரம் கடந்த காலங்களில் சரியாக கையாளப்படவில்லை என்று சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். ஆனால் நாம் எங்களால் முடிந்தளவு அந்த மக்களுக்கான சேவைகளை செய்திருக்கின்றோம். இது அங்கு வாழும் பிரதசே மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு மக்கள் வீதிக்கிறங்க காரணம்! கவலை வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா | People Neduntheevu Are Taking Streets Douglas   

பகல் நேரத்தில் அவதானமாக செயற்படவும்..! பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பகல் நேரத்தில் அவதானமாக செயற்படவும்..! பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நடுக்கடலில் தீவிரமடையும் பதற்றம்! ஈரானிய நிழற்கப்பற்படையை வழிமறித்த அமெரிக்க உலங்கு வானூர்திகள்

நடுக்கடலில் தீவிரமடையும் பதற்றம்! ஈரானிய நிழற்கப்பற்படையை வழிமறித்த அமெரிக்க உலங்கு வானூர்திகள்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US