மக்கள் பொலிஸாரை தாக்க நேரிடும் - முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் பாரிய குற்ற அலைகள் உருவாகியுள்ளதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் இத்தகைய நெருக்கடியை கையாள போதுமான பொலிஸ் அதிகாரிகள் இருந்தாலும், உயரடுக்கு பாதுகாப்பு கடமைகளுக்காக பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர்.
தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
பொலிஸ்துறை அதிகாரிகள் சாதாரண மக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தற்காப்புக்காக பொலிஸ்துறையினரை தாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
