வவுனியாவில் டீசலை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் (Photos)
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டில் மாத்திரமே டீசல் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுவதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.
நகர மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வவுனியா மன்னார் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று அதிகாலையிலிருந்து வாகனங்கள் வரிசையில் காத்திருந்து டீசலை பெற்று வரும் நிலையில் விவசாய தேவைகளுக்காகக் கொள்கலன்களிலும் டீசலை பெறப் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லா நிலையில் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பெரும் துன்பத்திற்குள்ளாகியுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
