வவுனியாவில் டீசலை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் (Photos)
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டில் மாத்திரமே டீசல் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுவதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.
நகர மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வவுனியா மன்னார் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று அதிகாலையிலிருந்து வாகனங்கள் வரிசையில் காத்திருந்து டீசலை பெற்று வரும் நிலையில் விவசாய தேவைகளுக்காகக் கொள்கலன்களிலும் டீசலை பெறப் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லா நிலையில் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பெரும் துன்பத்திற்குள்ளாகியுள்ளனர்.



ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam