கோவிட் சட்டங்களை மறந்து கடைகளில் குவிந்த பல்லாயிரகணக்கான மக்கள்
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நாடு முழுவதும் நகரங்களில் பல்லாயிரம் கணக்கான மக்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய மாவட்டங்களின் பிரதான நகரங்களில் பெருமளவு மக்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.
கோவிட் வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார ஆலோசனைகளை மறந்து மக்கள் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி மற்றும் சுகாதார கட்டுப்பாடுகள் போன்றவற்றை மக்கள் முழுமையாக மறந்து விட்டதனை அவதானிக்க முடிவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் மீண்டும் புதிய கோவிட் அலை ஏற்பட கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.