விபத்துக்குள்ளான கொள்கலனிலிருந்து எரிபொருள் சேகரித்த மக்கள் (Video)
திருகோணமலையில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வண்டியிலிருந்து மக்கள் எரிபொருள் சேகரித்துள்ளனர்.
திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து இன்று காலை 11 மணியளவில் ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றி சென்ற வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து
எரிபொருள் கொள்கலன் வண்டி 33,000 லீற்றர் எரிபொருளை ஏற்றி செல்லும் போது ஹப்புத்தளை - பங்கெட்டிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதி வழுக்கியமையே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேகரிப்பு
விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலனிலிருந்து பிரதேசவாசிகள் எரிபொருளை சேகரித்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸ் அதிகாரி கைது |

அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., ஆனால், கிராமமே எதிர்ப்பு News Lankasri

விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri
