யாழில் தையலகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு!
யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையலகத்தினுள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் தையலகத்தை அடித்து உடைத்ததுடன் அதன் உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 7:30 மணியளவில் தமது முகத்தை அடையாளம் காண முடியாதவாறு முகக்கவசங்களை அணிந்து தையல் நிலையத்திற்குள் புகுந்த கும்பல் தையல் நிலைய உரிமையாளர் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
மின்சாரம் தடை
இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த நபர்கள், மின்சாரம் தடைப்பட்டதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
படுகாயமடைந்த 44 வயதான உரிமையாளர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல்-எரிமலை