பேனா போன்ற வடிவில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது
பேனா போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரபாத் மதுசங்க என்றழைக்கப்படும் “மிடிகம சூட்டி” தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொதுமக்கள் முறைப்பாட்டு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் வெலிகம இப்பாவல துன்திரிஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, பேனாவைப் போன்ற வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

37 வயதுடைய சந்தேகநபருக்கு இந்த ஆயுதம் எவ்வாறு கிடைத்தது, அதைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா, அல்லது குற்றக் கும்பல்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பன குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்ற விசாரணைப் பிரிவுதொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan