உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசங்களில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலகத்திற்கு நேற்று (14.01.2023) காலை வருகைதந்த கட்சியின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் க.அருணாதிலன் கட்டுப்பணங்களை செலுத்தியிருந்தார்.