மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு
கோவிட் தொற்றுக் காரணமாக அண்மையில் இறந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
யாழ். கொடிகாமத்தினை சேர்ந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் அவரது உடலம் எரியூட்டப்பட்டது.
இந்த நிலையில் மட்டு. ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் அமரர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.






300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
