சுகாதார அமைச்சின் முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகள்
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் சுகாதார அமைச்சின் முன்பாக சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் காரணமாக பார்வையிழந்த மற்றும் அங்கவீனமடைந்த நோயாளிகள் சிலரே இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சத்தியாக்கிரகப் போராட்டம்
கெஹலியவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து அனுமதி பெற்றிருந்தார்.

எனினும் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குப் பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனக்கு வேண்டப்பட்டவர்களை மாத்திரம் தெரிவு செய்து இழப்பீடு வழங்கியுள்ளதாக சிவில் மற்றும் மருத்துவ உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளர் மருத்துவர் சமல் சஞ்சீவ குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே பாதிக்கப்பட்ட நோயாளிகள் இன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam