முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி கைது
முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியாந்த ஜயகொடி, குற்றப்புலனாய்வுத் திணைக்க அதிகாரிகளினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரியந்த ஜயகொடி, ‘கெஹெல்பத்தர பத்மே’ என்ற பெயரிலான பதாள உலகக் குழு குற்றவாளிக் குழு தலைவர், தன்னை கொலை செய்யும் வகையில் மிரட்டியதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தவறான முறைப்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜயகொடி கைது
கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயகொடி தற்போது ஒரு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் பொலிஸ் கண்காணிப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி காவல்துறை ஊடகப் பேச்சாளராக கமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: அஸ்ரப் அலி



