திருகோணமலை வைத்தியசாலையில் உபகரணங்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளிகளை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படாமையால் அவரின் உறவினர்கள் நோயாளியை தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (19.1.2024) திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில், திருகோணமலை வைத்தியசாலையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை எனவும் இதனால் நோயாளியை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளிகள் பல அசௌகரியம்
இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் நோயாளிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.
அத்துடன் களங்களில் நோயாளிகளுக்கான கட்டில்கள் பற்றாக்குறையின் காரணமாக தரையில் காட்போட் அட்டைகளை விரித்து படுக்க வேண்டி இருப்பதாகவும் நோயாளிகள் கவலை வெளியிடுகின்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் மருந்து மற்றும் வைத்தியசாலை உபகரணங்களின் பற்றாக்குறையின் காரணமாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாகவும் சிறந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் நேயாளிகள் விசனம் வெளியிடுகின்றனர்.





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
