இருபது மாதங்களில் அதிகரித்துள்ள கடன் சுமை:சம்பிக்கவின் பகிரங்கம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20 மாதங்களுக்குள் எமது அனைவரையும் குறைந்தபட்சம் ஒரு தலைக்கு ஒரு இலட்சம் ரூபாய் கடனாளியாக்கியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்க எழுதிய புத்தக வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்துரையாற்றிய அவர் அதை செலுத்த வேண்டியது நம் நாட்டு மக்கள் தான்.
பால் மா, கோதுமை மா, அரிசி மா, டீசல் மற்றும் பெட்ரோல் மீது விதிக்கப்படும் அதிக வரிகள் மூலம் செலுத்த வேண்டியுள்ளது.
விதிக்கப்பட்டுள்ள பாரியளவிலான வரி
அடுதற்காக இவர்கள் கூறும் காரணம் வளைகுடா யுத்தம். வளைகுடா யுத்தம் 1991 இலும் இருந்தது. 2003 இலும் இருந்தது.
உலகளவில் இதை விடவும் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008 இல் ஒரு பெரல் எண்ணெயின் விலை 147 டொலர்களாக இருந்தது. ஆனால் இப்படியொரு நெருக்கடி நாட்டில் இருக்கவில்லை.
லக நெருக்கடிகளுடன் நாட்டுக்குள்ளும் யுத்தம் இருந்தது. ஆனால் இப்படியொரு நெருக்கடி இருக்கவில்லை. நான் மாத்தறை கூட்டத்தில் கூறினேன் இலங்கைக்கு டீசல் கொண்டு வருவது 750 ரூபாய் என்று.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதற்கு சில ஊடகங்களை பயன்படுத்தி எங்களுக்கு சேறு பூசினார். இப்போது கூட்டுத்தாபனத்தின் தலைவரே கூறுகிறார் ஒரு லீட்டர் டீசல் 750 ரூபாய் ஆகும் என்று.
இப்போது நாம் ஜனாதிபதிக்கு விடுக்கும் சவால் என்னவென்றால் 380 ரூபாய் அல்லது 390 ரூபாய்க்கு டீசல் விற்கப்படுகிறது.
மீதித் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று எங்களுக்குக் கூறுங்கள். மீதித் தொகை எவ்வளவு? 750 ரூபாயில் மீதமுள்ள 350 ரூபாய் எவ்வாறு உருவாகிறது என்று எங்களுக்குக் கூறுங்கள்.அதை மறைத்து வைத்துள்ளனர்.மீதமுள்ள தொகை பாரிய வரியாக நாம் சுமக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டார்.