பாட்டலி சம்பிக்க ரணவக்க கலந்துக்கொண்ட கலந்துரையாடலில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த கலந்துரையாடல் தொடர்பில் செய்தி அறிக்கையிடுவதற்கு ஊடகங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறித்த விருந்தகத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் வரவேற்றதுடன், கரைச்சி பிரதேச சபையில் சுயேட்சைக்கூழு ஊடாக தெரிவாகிய பிரதேச சபை உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு தலைவர் மனோகரன் ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.
தொடர்ந்து விருந்தக மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan