தெய்வீக சக்தியால் மற்றவர்களைக் குணப்படுத்துவதாகக் கூறிய போதகருக்கு டெங்கு காய்ச்சல்
தெய்வீக சக்தியால் கடுமையான நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறிவந்த போதகர் ஒருவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெய்வீக ஆசீர்வாதங்களாலும் தெய்வீக சக்தியாலும் கடுமையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கூறிவந்த நாட்டின் பிரபலமான ஒரு போதகருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான மருத்துவ சிகிச்சையைப் பெற அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடும் விமர்சனங்கள்..
கடந்த சில காலமாக பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்கும் சமூகமட்டத்திலான தீவிர விவாதங்களுக்கும் உள்ளான இந்த நபர், நாட்டின் பல முக்கிய அரசியல்வாதிகள், பிரபலமான விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் பலர் அவரது சீடர்களாகவும் செயல்படுகின்றனர்.

தனது தெய்வீக சக்தியால் மற்றவர்களைக் குணப்படுத்துவதாக அவர் கூறினாலும், உள்ளூர் மருத்துவமனை முறையையோ அல்லது தனது தெய்வீக சக்தியையோ பயன்படுத்தாமல், தனது டெங்கு காய்ச்சலுக்கு வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை நாடிச் சென்றுள்ளமை சீடர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அத்துடன், போதகரின் திடீர் வெளிநாட்டுப் பயணம், அவரது சீடர்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் ஒரு சூடான விவாதத்தை உருவாக்கியுள்ளது.
தற்போது பரவிவரும் டெங்கு காய்ச்சல் தொற்றுநோய்க்கு மத்தியில், சிகிச்சைக்காக வெளிநாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு: புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வராததன் பின்னணியிலுள்ள மர்மம்
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan