நானுஓயா தொடருந்து நிலையத்தில் பயணிகள் அவதி
நுவரெலியா (Nuwara Eliya) - நானுஓயா பகுதியிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி செல்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பொது மக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் தொழில் நிமிர்த்தம் கொழும்பு திரும்பும் பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் நானுஓயா தொடருந்து நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்வதற்கு அதிகமான பயணிகள் வருகைத்தருவதால் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பற்ற பயணம்
மேலும், அதிக பயணிகள் நானுஓயாவிற்கு வருகை தந்துள்ளதன் காரணமாக தொடருந்து சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் தொடருந்து மிதிபலகையில் நின்றவாறு பயணம் செய்துள்ளனர்.
அத்துடன், நுவரெலியா மற்றும் நானுஓயா உள்ளிட்ட சுற்றுலா பிரதேசங்களில் இருந்து பதுளை - எல்ல பகுதியை நோக்கி செல்வதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நானுஓயா தொடருந்து நிலையத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செய்தி - திவாகரன்




கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
