இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை! அமைச்சர் உறுதி
இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாதீட்டுக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றுள்ளது.

இதன்போது பேசிய அமைச்சர் வேலு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை ராமேஸ்வரம் - தலைமன்னார், ராமேஸ்வரம் - காங்கேசந்துறை ஆகிய வழித்தடங்களில் ஆரம்பிக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
எனினும் எப்போது இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என்பதினை அவர் கூறவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri