7 நாட்களுக்கு பின் மீள்திறக்கப்பட்ட பசறை வீதி
பசறை - பிபில வீதி 13இல் கனுவ பகுதியில் பாரிய பாறைகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக ஏழு நாட்களாக மூடப்பட்டிருந்த பசறை - பிபில வீதி இன்று (24) பிற்பகல் மீள்திறக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வீதி அபிவிருத்தி பணிப்பாளரின் பதுளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் விடுத்துள்ளது.
இரவில் மூடப்படும்...
பகலில் போக்குவரத்துக்காக வீதி திறக்கப்பட்டுள்ள போதிலும், பசறை - பிபில வீதி 13இல் உள்ள கனுவா பகுதியில் பாறைகள் உருவாகும் அபாயம் உள்ளதால் தினமும் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை வீதி மூடப்படும் என அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பசறை - பிபில வீதியில் 13, கனுவ பிரதேசத்தில் கடந்த 11ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் மலை உச்சியில் இருந்த பாரிய பாறைகளும் மரங்களும் சரிந்து பசறை பிபில மற்றும் மொனராகலையின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 23 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
