தென்னிலங்கையில் விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் - யுவதி உட்பட 21 பேர் கைது
பாணந்துறை, ரஸ்கிந்துவ பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது யுவதி உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
DJ இசை
முறையற்ற முறையில் DJ இசையை பயன்படுத்தி விருந்து நடத்துவதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பலரிடமிருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குழுவில் உள்ள இளம் பெண் பொலிஸ் காவலில் உள்ள நிலையில், ஏனைய 21 சந்தேக நபர்களும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri