இரு மாதங்களின் பின் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் கொழும்பின் சில பகுதிகள்
கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தலில் இருந்த மருதானை, வாழைத்தோட்டம், டாம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை அதிகாலை 5 மணி முதல் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலைமை தொடர்பில் கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, குறிப்பாக கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் மருதானை, தெமட்டகொட உள்ளிட்ட பிரதேசங்களிலும், ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் வாழைத்தோட்டம், டாம் வீதி உள்ளிட்ட பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.