வவுனியாவை ஆக்கிரமித்துள்ள பார்த்தீனிய களை (Video)
வவுனியாவில் பல பகுதிகளை பார்த்தீனியம் எனும் களை ஆக்கிரமித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக நகர் பகுதிகள், வீதியோரங்கள், புகையிரத பாதைகள் மற்றும் விவசாய நிலங்கள் என பல இடங்களை இந்த களை ஆக்கிரமித்துள்ளது.
விவசாயத்துறைக்கு அதிகளவில் கேடு விளைவிக்கும் தாவரமாக பார்த்தீனியம் காணப்படுகின்றது.
கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்
விவசாயப் பயிர்களை அழித்து ஆக்கிரமித்து வளரக்கூடிய தன்மையுள்ளமையால், இந்த களை பரவும் இடத்தில் பயிர்செய்கை மேற்கொள்ள முடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை பார்த்தீனிய களை பரவுவதை தடுப்பதற்கு கடந்த காலங்களில் பல்வேறு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அச்செயற்பாடுகள் தொடர்ந்து
மேற்கொள்ளப்படாமையினாலே தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




