குற்றவாளிகளை விடுவித்த அலி சப்ரியே, நெருக்கடி நிலைக்கு பொறுப்பு! -ஐக்கிய மக்கள் சக்தி!
நாட்டில் .ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆரம்பித்த பொறுப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவி்த்துள்ளது.
அவர் இன்று உண்மையை கூறுவதாக தம்மை நியாயப்படுத்துகின்றபோதும், அவரே முழுமை பொறுப்பாளி என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா வித்தானகே, நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை கொண்ட பலரை, தமது பதவியை பயன்படுத்தி விடுவித்ததன் மூலம், அலி சப்ரியே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஹேசா வித்தானகே குறிப்பிட்டார்.
இந்தநிலையில் கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறை தொடர்பில், மகிந்த ராஜபக்சவிடமே, முதன்முறையாக வாக்குமூலம் பெறப்பட்டிருக்கவேண்டும்.
எனினும் அது மேற்கொள்ளப்படாமல் இருப்பது உண்மை கண்டறியப்படாது என்பதற்கான சமிஞ்சையாகும் என்றும் வித்தானகே குறிப்பிட்டார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகிச் செல்லும் வரை, எந்த நாடும் இலங்கைக்கு டொலர்களை வழங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam