ஜனாதிபதியுடன் சேர்ந்து தாடி மீசையைதான் வளர்க்கமுடியும்- ஐக்கிய மக்கள் சக்தி!
ஜனாதிபதியின் யோசனை
ஜனாதிபதிக்கு தற்போதே பயிர்களை வளர்ப்பதற்கு யோசனை வந்துள்ளது.
எனினும் ஜனாதிபதியுடன் சேர்ந்து தற்போது தாடி மற்றும் மீசையைதான் வளர்க்கமுடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்து இதனை எதிர்கட்சி வலியுறுத்தியபோதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்தார்.
எனினும் இதன்போது மூத்த அமைச்சர்களான சமல் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச போன்றோர் ஏன் அவருக்கு தவறுகளை சுட்டிக்காட்டவில்லை என்று இந்துனில் கேள்வி எழுப்பினார்.

நான் குற்றவாளி இல்லை
இதன்போது நாட்டின் ஜனாதிபதியை தவறாக பேசக்கூடாது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தநிலையில், அவர் குற்றவாளியாக இருந்து கொண்டு, தம்மை விமர்சனம் செய்யமுடியாது என்று இந்துனில் குறிப்பிட்டார்.
எனினும் தாம் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், தம்மை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்கவில்லை என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதேவேளை உலகத்தினால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியும், நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதமரும் இணைந்து நாட்டை ஆட்சி செய்வதாக குறிப்பிட்ட இந்துனில், இவர்களை நம்பி, சர்வதேச நிதியுதவிகளை வழங்காது என்றும் தெரிவித்தார்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri