ஜெனீவாவில் தப்பிக்க அமொிக்காவுடன் இணைந்து செயற்படும் நிலை: கோட்டாபய அரசாங்கத்தின் அடுத்த திட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தமது நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து விலகவுள்ளார்.
அமெரிக்காவுக்கான இலங்கையின் துாதுவராக பதவியேற்பதற்காகவே இன்னும் சில நாட்களில் தாம் நாடாளுமன்ற நிலையில் இருந்து விலகவுள்ளதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜெனீவா மனித உாிமைகள் பேரவையின் உறுப்பினராக மீண்டும் அமொிக்கா இணையவுள்ளது.
எனவே அமொிக்காவுடன் நெருங்கிய உறவைப் பேண வேண்டிய முக்கிய பொறுப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது ஜெனீவா அனுபவத்தின் அடிப்படையில் மனித உாிமைகள் பேரவையில் அமெரிக்காவே தலைமை தாங்கும் நிலையைக்கொண்டுள்ளது.
எனவே அந்த நாட்டுடன் இணைந்து செயற்படவேண்டியது அவசிமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.