இலங்கையின் வடக்கில் குடியிருப்புகள் காடுகளாக்கப்படுவதால் சந்தேகம்
காடுகள் பாதுகாக்கப்படவேண்டும். எனினும் குடியிருப்பு பகுதிகள் காடுகளாக அறிவிக்கப்படக்கூடாது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்த கோரிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்
குடியிருப்பு பகுதிகள் காடுகளாக்கப்பட்டு அந்த பிரதேசங்கள் பின்னர்,வடக்கின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
வவுனியா நெடுங்கேணியில் இது போன்ற குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சித்தார்த்தன் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை அம்பாறை வட்டமடு பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் காணிப்பிரச்சனை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், அது தொடர்பில் கவனமான அனுகுமுறை தேவை என்று ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தை தமிழ் மக்கள் மேய்ச்சல் நிலம் என்று கூறுகின்ற நிலையில் முஸ்லிம் மக்கள் வயல் நிலம் என்று கூறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam