எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும்
எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தனிமைப்படுத்தல் சட்டங்களின் அடிப்படையில் நிச்சயமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் நடாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 8ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கட்டாயமாக அமர்வுகளை நடாத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றின் படைக்கள சேவிதர் ஹரேந்திர பெர்னாண்டோ இந்த தகவல்ளை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றை ஒத்தி வைக்க வேண்டுமென்றால் 8ம் திகதி நாடாளும்றை கூட்டி அதன் பின்னர் ஒத்தி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளை 8ம் திகதியின் பின்னர் நடாத்துவதா இல்லையா என்பது எதிர்வரும் 7ம் திகதி தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.