கல்வித்துறைசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்க வேண்டும் - பந்துல
இலங்கையில் உயர் கல்வித்துறைசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றின் மூலம் ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சிகளினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே மிகவும் உசிதமான முறை என்பது தமது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வர்த்தக அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.