நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும்: சந்திரசேன கோரிக்கை
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன கோரிக்கை விடுத்துள்ளார் .
தேர்தலுக்கான மொட்டுக் கட்சியின் ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தல் நடந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் எதிர்கொள்வதற்கு நாம் தயார்.
அரசியல் வியூகம்
யார் என்ன சொன்னாலும் இலங்கையில் உள்ள பலமான கட்சி எமது கட்சி என்பதே உண்மை. தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாட்டுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
நாளை தேர்தல் வைத்தாலும் நாம் தயார். முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால் நல்லது. இது எனது தனிப்பட்ட கருத்தாகும். பசில் ராஜபக்ச இம்மாதம் நாட்டுக்கு வருவார். அவர் போல் அரசியல் வியூகம் வகுத்துச் செயற்படக்கூடிய தலைவர் கிடையாது. பசில் வந்ததும் தேர்தல் பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |