நாடாளுமன்ற உறுப்பினர் சாமரவின் மீது கடவுச்சீட்டு ஒப்பந்த குற்றச்சாட்டு
முன்னைய அரசாங்க நிர்வாகத்துக்கு 2,700 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கடவுச்சீட்டு ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விபரங்களைக் கருத்திற் கொண்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்குமூலத்தைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், குறித்த பரிவர்த்தனையில் ஆலோசகராகச் செயற்பட்ட ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துப் பிரிவால் நாவலாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது உரிமம் பெறாத ஒரு சிறிய கைத்துப்பாக்கி, 20 சுற்று வெடிமருந்துகளுடன் உரிமம் பெற்ற 9 மில்லி மீற்றர் கைத்துப்பாக்கி மற்றும் ஒரு எஸ்எல்ஜி ஜீரோ 123 ரிப்பீட்டர் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக விற்பனை
தகவல்களின்படி, குற்றம் சுமத்தப்பட்டுள்ள லங்கா பாஸ்போட் என்ற நிறுவனம், மூன்று நிறுவனங்களுக்கு 30,000 மெட்ரிக் டன் கடவுச்சீட்டுக்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.
இதன் விளைவாக அரசாங்கத்திற்கு சுமார் 2,700 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
