ஆயுதங்களுடன் நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்படும்: ஐ. மக்கள் சக்தி எச்சரிக்கை
ஆயுதங்களுடன் நாடாளுமன்ற அமைந்துள்ள பகுதியை சுற்றிவளைக்கும் தயார் நிலைகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தகவல் வெளியிட்டுள்ளார்.
கனரக வாகனங்களும் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் ஆயுதங்களுடன் கூடிய இந்த சுற்றிவளைப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கமத்தொழில் மற்றும் நீர்பாசன அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் அன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதனால், நாட்டில் நிலவும் பசளை பிரச்சினை அன்றைய தினத்திற்கு முன்னர் தீர்க்கப்படவில்லை என்ற இந்த சுற்றிவளைப்பு நடக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறு விவசாயிகளுடன் ஆயுதங்கள் மற்றும் கனரக வாகனங்களை பயன்படுத்தி இந்த சுற்றிவளைப்பை மேற்கொள்ள உள்ளது எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டு வரப்படவுள்ளன என்பது குறித்து அவர் எதனையும் கூறவில்லை.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri