அடுத்த வாரம் 3 நாட்கள் நாடாளுமன்ற அமர்வு
அடுத்த வாரம் 3 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வு நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் பூரண சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி ஆணைக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
