துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தை நிறைவேற்ற கூடும் நாடாளுமன்றம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை 2021, மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத்துறை இன்று அறிவித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைக்குழு இன்று கூடி அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டங்களை மே மாதம் 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நடத்த முடிவு செய்தது.
கோவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களால் பின்பற்றப்பட்டு நாடாளுமன்றத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
மேலும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை 2021 மே 19, 20 திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.
அதன்படி, இந்த யோசனை 19 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.30 மணி
வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். அது 20ஆம் திகதி முற்பகல் 10.00
மணி முதல் மாலை 4.30 மணி வரை தொடரும் என்றும் நாடாளுமன்ற செயலாளர்
தெரிவித்துள்ளார்.
