காட்சி மாற்றம் ஏற்பட்ட பரந்தன் சந்தி

Kilinochchi Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Jun 18, 2024 04:42 AM GMT
Report
Courtesy: uky(ஊகி)

கிளிநொச்சி (Kilinochchi) பரந்தன் சந்தியில் இருந்த சிலையை அகற்றிவிட்டதால் காட்சி மாற்றம் ஏற்பட்ட பரந்தன் சந்தியை பார்க்க கவலையளிப்பதாக ஈழ ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பரந்தன் சந்தியின் தற்போதைய தோற்றம் கண்கவர் முறையில் இல்லை.அதனை மென்மேலும் கவர்சிகரமானதாக மாற்ற முயலலாம்.

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் புதுப்பிக்கப்படும் : ஐக்கிய மக்கள் சக்தி

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் புதுப்பிக்கப்படும் : ஐக்கிய மக்கள் சக்தி

முல்லைத்தீவுக்கான A35 பாதையினால் முல்லைத்தீவு நகரை A9 பாதையுடன் இணைத்து விடுகின்ற வகையில் பரந்தன் சந்தியின் அமைவு இருக்கின்றது.

முல்லைத்தீவினை நினைவுபடுத்தும் வகையில் அதன் கம்பீரத்தை எடுத்துரைக்கும் வகையில் பரந்தன் சந்தியில் மன்னன் பண்டாரவன்னியன் சிலையிருந்தால் கூட நன்றாக இருக்கும் என அவர்களின் கருத்தாடல்கள் இருந்தன.

பரந்தன் சந்தியின் கம்பீரம்

பரந்தன் சந்தியில் 2009இற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் பீரங்கிப்படையணி ஒன்றினை நினைவுபடுத்தும் வகையில் சிலை வைக்கப்பட்டு அதன் மீது கூடாரமும் அமைக்கப்பட்டிருந்தது.

paranthan-junction-where-the-scene-changed

குட்டிச்சிறி மோட்டார் படையணியின் நினைவாக குட்டிச் சிறியின் உருவச்சிலையும் மோட்டார் பீரங்கி ஒன்றின் சிலையும் இணைந்த நிலையில் சிலையமைப்பு இருந்தது.

பரந்தன் சந்தியில் இந்த சிலை ஒரு சுற்றுவட்டப்பாதையை அமைப்பது போல இருக்கும் அதேவேளை இன்றுள்ள பாதையின் அதே பயணத் தோற்றப்பாட்டைப் போலவே அன்றும் இருந்திருந்தது எனவும் அவர்களில் இருந்த முதியவர் ஒருவர் தன் நினைவுகளை மீட்டியிருந்தார்.

இப்போது பரந்தன் சந்தியில் உள்ள மின்கம்பம் இருந்த இடத்தில் முன்னார் அந்த சிலை இருப்பது போன்ற எண்ணத் தோற்றம் தனக்கிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேடையும் அதன் மீது சிலையும் சிலையினை வெய்யிலில் இருந்து காப்பது போல் அமைக்கப்பட்ட சீமெந்து கூடாரமும் கம்பீரமான உணர்வை ஏற்படுத்தி விடுவதில் ஒரு முறை தானும் தவறியதில்லை என மற்றொரு முதியவர் குறிப்பிடுகின்றார்.

வீரத்தின் குறியீடாக மிடுக்கான எண்ணத் தோன்றல்களை ஏற்படுத்தி விடுவதாக அந்த சிலையமைப்பு இருந்திருந்தது என்றால் மிகையாகாது.பரந்தன் சந்தியின் சுற்றுச் சூழல் கூட தூய்மையானதாகவே இருந்ததாக தனக்கு நினைவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் உற்பத்தியான அபூர்வ மரவள்ளிக்கிழங்கு

இலங்கையில் உற்பத்தியான அபூர்வ மரவள்ளிக்கிழங்கு

சிலை எங்கே?

2009 போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளை நினைவுபடுத்தும் எத்தகையதொரு அடையாளங்களும் தாயகப் பரப்பில் இருக்க கூடாது என்ற எண்ணத்துடன் இயங்கிய இலங்கை இராணுவம் அந்தச் நிலையினை அகற்றி விட்டதாக பரந்தனை வாழிடமாக கொண்டிருந்த வயோதிபர் ஒருவருடன் உரையாடியதன் மூலம் அறிய முடிகிறது.

paranthan-junction-where-the-scene-changed

ஆயினும் 2009 மீள் குடியேற்றம் நடந்த பின்னும் சில காலம் அந்த சிலைகள் உடைக்கப்பட்ட நிலையில் கூடாரம் இருந்தது. வீதியபிவிருத்தியோடு எல்லாம் மறைந்து விட்டது.இப்போது பலருக்கு பரந்தன் சந்தியின் சிலையும் மறந்து விட்டது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழர்களின் மனங்களில் வரலாறாக கடந்த கால நிகழ்வுகள் இருக்கும் போது தான் தற்கால நிகழ்வுகளுக்கூடாக தாம் எந்தளவுக்கு சிதைக்கப்பட்டு தங்கள் பாரம்பரியம் மாற்றப்பட்டு விடுகின்றது என்பதை உணர முடியும்.

இளம் சந்ததியினரின் எதிர்காலம் மீண்டும் முன்னைய வரலாற்றை தேடுமளவுக்கு இட்டுச் சென்று விடக்கூடாது என்றால் இது போன்ற சிறிய சிறிய நினைவுகளை பேணிக் கொள்ளல் அவசியமாகிறது.

தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த மகன் - பொலிஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்

தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த மகன் - பொலிஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்

நினைவுகளை அழித்தல் 

வன்னியில் இது போல் பல சிலைகளும் நினைவிடங்களும் அழிக்கப்பட்டு இருக்கின்றன.

paranthan-junction-where-the-scene-changed

ஆனாலும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்களை அழித்து அவர்களது நினைவுகளை மக்கள் மனங்களில் இருந்து அழிக்க முயலும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு வியப்பளிக்கின்றது.

விடுதலைப்புலிகளின் முகாம்கள் இருந்த இடங்களில் இப்போது இராணுவ முகாம்களை அமைத்திருக்கின்றனர்.அந்த முகாம்களை பார்க்கும் போது விடுதலைப்புலிகளின் முகாம்கள் இருந்தது நினைவுக்கு வந்து விடுவதை அந்த இராணுவ முகாம்கள் தூண்டி விடுகின்றன.

கிளிநொச்சி நகரில் உள்ள பல இராணுவ மற்றும் பொலிஸ் செயற்பாட்டு மையங்கள் முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம்கள் இருந்த இடங்களாக இருப்பதனையும் சுட்டலாம்.

உண்மையில் விடுதலைப்புலிகளின் நினைவுகளை மக்கள் மனங்களில் இருந்து அழிப்பது என்றால் இராணுவ மயமாக்கலுக்குள் வாழ்வதான சூழல் தமிழ் மக்களிடையே இருக்காது பார்க்க வேண்டும் என சமூக உளநல ஆலோசகர் ஒருவருடன் நினைவழிப்புக்கள் தொடர்பில் மேற்கொண்ட கேட்டலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

புளியம்பொக்கணை நாகதம்பிரான் சிலை 

இன்றைய சூழலில் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை பாதுகாக்கும் பொருத்தப்பாடான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கூடியளவு கவனமெடுக்க வேண்டும்.

paranthan-junction-where-the-scene-changed

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் தமிழார்வ உணர்வுகளை தந்து விடும் வீதியோர காட்சிகளில் ஆன்மீக சிலைகள் மற்றும் ஆலயங்கள் இருப்பது போல் முல்லைத்தீவு நோக்கிய பாதையின் ஆரம்பமான பரந்தன் சந்தியிலும் ஒரு சிற்பத்தினை நிறுவி விடலாம் என தமிழார்வலர் சிலர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

அவர்களது கூற்றுப்படி புளியம்பொக்கணை நாகதம்பிரான் சிற்பம் ஒன்றை பரந்தன் சந்தியில் நிறுவி விடலாம்.இந்த முயற்சி பொருத்தப்பாடானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பரந்தன் சந்தியில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திற்கான வழிகாட்டி பெயர்ப்பலகை ஒன்று இருப்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

paranthan-junction-where-the-scene-changed

இந்த மாற்றம் பரந்தன் சந்தியை எழில் மிகு தோற்றத்தோடு தமிழ் மணம் வீசும் இடமாக சித்தரித்து A9 பாதை மற்றும் A35 பாதைவழி பயணப்படுவோருக்கு தமிழுணர்வை ஏற்படுத்தி விடுவதில் ஒருபடி முன்னேறி விடலாம் என்பது நோக்கத்தக்கது.

தமிழ் மீதும் தமிழ்த்தேசியம் மீதும் பற்றுறுதியோடு செயற்பட்டுவரும் யாரொருவரோ இது பற்றி சிந்திக்க தலைப்பட்டால் பரந்தன் சந்தியிலும் ஒரு பெரிய நாகதம்பிரான் சிற்பம் தோன்றி விடுவதை தடுத்து விட முடியாது.

தட்டுவன்கொட்டிச் சந்தியில் உள்ள நடராஜர் சிற்பம் போல் என புளியம்பொக்கணை நாகதம்பிரான் பக்தர் ஒருவருடன் இந்த சிந்தனை பற்றிய உரையாடலை மேற்கொண்டிருந்தவேளை அவர் மேற்படி பொருள்பட தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US