சங்கமித்தை வரவும் இல்லை அரசமரம் நடவுமில்லை: யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டம் (Photos)
பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராகவும் தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் யாழில் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(05.08.2023) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகெண்டனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் பாததைகளை ஏந்தியவாறு "சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை, பொய்யான வர்த்தமானியை இரத்துச் செய், இந்த மண் எங்களின் சொந்த மண், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், பறாளாய் முருகன் தமிழர் சொத்து, தாயகத்தில் ஆக்கிரமிப்பு சர்வகட்சி கூட்டத்தில் நல்லகணக்க நாடகம், இராணுவமே வெளியேறு" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலதிக தகவல் கஜிந்தன்













ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
