பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு: 2000ஐ தாண்டும் பலி எண்ணிக்கை
பப்புவா நியூ கினியாவில் (New Guinea) ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 2000இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த அனர்த்தமானது, கடந்த வெள்ளிக்கிழமை (24) முங்காலோ மலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுமார் 700இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை (UN) நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.
மீட்பு பணி
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மீட்பு பணியில் தற்போது 2000இற்கும் அதிகமானோர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த பகுதியில் தொடர்ந்தும் நிலம் சரிந்து கொண்டிருப்பதனாலும் நீர் வழிந்தோடிக் கொண்டிருப்பதனாலும் ஆபத்து அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 4000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,000இற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியிலிருந்து தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அது மாத்திரமன்றி, அப்பகுதியிலுள்ள உணவுத் தோட்டங்கள் மற்றும் நீர் விநியோகங்கள் ஆகியன முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam