சிறைக்கு செல்லலாம்! மரணிக்கவும் நேரிடலாம் - ஜனாதிபதியால் பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்லும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், இனிவரும் காலங்களில் நாங்கள் சிறைக்கும் செல்லலாம் அல்லது மரணிக்கவும் நேரிடலாம். அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் ஜனாதிபதியால் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
இரண்டு அமைச்சர்களும் அண்மைக்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் இந்த பதவி பறிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பரவலாக தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,