நியூசிலாந்தில் இலங்கையரால் கத்திக்குத்து தாக்குதல் - இம்மாத இறுதிக்குள் வரும் புதிய சட்டங்கள்
நியூசிலாந்தின், ஒக்லாந்தில் கத்தியால் குத்தி ஏழு பேரை காயப்படுத்தியதால் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட முஹமட் அஹமது சம்சுதீன் ஆதில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து 53 நாட்களாக 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், அவர் எந்த நேரத்திலும் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடங்குவார் என்று அதிகாரிகள் கவலைப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை குறித்த வழக்கு நியூசிலாந்தின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் உள்ள குறைப்பாடுகளை எடுத்துக்காட்டுவதால், புதிய சட்டங்களை இந்த மாத இறுதிக்குள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
