ஹிஷாலினி உயிரிழப்பில் தொடரும் மர்மம் - தாய் கண்முன் திறக்கப்பட்ட சவப்பேழை
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு இலக்காகி டயகம சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடித்து வரும் நிலையில் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நேற்றைய தினம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் சடலம் அடங்கிய சவப்பேழை குழியிலிருந்து வெளியில் எடுக்கப்பட்ட நிலையில் திறக்கப்பட்டு சடலம் அடையாளம் காணப்பட்டது.
சடலத்தை அடையாளம் காட்ட சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில், அவர்கள் ஹிஷாலினியின் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,