கொழும்பிலுள்ள பெறுமதி வாய்ந்த காணிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
தற்போதைய அரசாங்கத்தினால் நிதியமைச்சின் கீழ் ஸ்தாப்பிக்கப்பட்ட செலெந்திவா நிறுவனம் மூலம் கொழும்பிலுள்ள பெறுமதி வாய்ந்த காணிகளை வெளிநாடுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த செலெந்திவா நிறுவனம் யாரால் ஸ்தாபிக்கப்பட்டது? அதற்குரிய அதிகாரங்கள் யாரால் வழங்கப்பட்டுள்ளன? என்ற கேள்விக்குரிய பதிலை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam