மீண்டும் அபாய நிலைக்கு தள்ளப்படும் நாடு! மறைக்கப்படும் உண்மைகள்
டெல்டா வைரஸ் திரிபு தொடர்பிலான உண்மைத் தரவுகளை சுகாதார அதிகாரிகள் மறைப்பதாலும் சுகாதார வழிகாட்டல்களை பொது மக்கள் புறக்கணித்து செயற்படுவதாலும் நாடு அபாய நிலைக்குத் தள்ளப்படுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு டெல்டா வைரஸ் திரிபு தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்களை வெளியிடவில்லை. அதனால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அறிந்து கொள்ள முடியவில்லை.
இதேவேளை மரபணு விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் தகவல்களை மறைத்து வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவிட் - 19 தொற்றிலிருந்து நாடு தற்போது தான் மீண்டு வரும் நிலையில் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே டெல்டா வைரஸால் நாடு அபாய நிலைக்கு தள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan