அடுத்த சில நாட்களில் மீண்டும் நாட்டை முடக்கும் தீர்மானம் எடுக்கப்படுமா?
டெல்டா வைரஸ் தொற்று சமூகத்தில் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டை திறந்திருப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் எடுக்கும் சூழ்நிலையை அடுத்து வரும் சில நாட்கள் உருவாக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு வார காலம் நாடு முடக்கப்பட்டு அடுத்த வாரத்தில் இருந்து பயணத்தடையை தளர்த்த நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னமும் ஆரோக்கியமான நிலையொன்றில் நாடு இருந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சமூகத்தில் ஒரு சில பகுதிகளில் டெல்டா வைரஸ் தொற்று பரவுள்ள நிலையில் மீண்டும் தீர்மானம் எடுக்கும் சூழ்நிலையை அடுத்து வரும் சில நாட்கள் உருவாக்கும் என்றே நாம் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நாட்டை திறப்பதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
