பயணக்கட்டுப்பாடு நீக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய செயற்பாடாகவே பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணக்கட்டுப்பாட்டை நீக்குவதாயின் அதனை அவதானமாகவும் தீவிரமாகவும் ஆராய்ந்தே அரசாங்கம் முடிவெடுக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய செயற்பாடாகவெ பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயணக்கட்டுப்பாட்டை நீக்குவதாயின், அதனை அவதானமாகவும் தீவிரமாகவும் ஆராய்ந்தே அரசாங்கம் முடிவெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,